Wednesday, July 2, 2014

உன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் சதா உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது ! உனக்குத்தான் கேட்கவில்லை ?

நீங்களோ நானோ ஒரு போதும் தனியாக இல்லை. எம்மை சுற்றி உள்ள இந்த பரந்த விரிந்த பிரபஞ்சம் சதா எங்களுடன் பேசுகிறது சிரிக்கிறது இடையிடையே கோபிக்கிறது இன்னும் என்னனவோ உணர்ச்சிகளையும் செய்திகளையும் எம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது.
நாம் தான் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாமல் மனதையும் மூடிக்கொண்டு விட்டோம், அதனால் அவற்றின் இனிய சங்கீதத்தை எம்மால் ரசிக்க தெரியாமல் இருக்கிறது.
உண்மையில் நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல . இன்னும் சரியாக சொல்லப்போனால் எமது கண்களினூடாக இந்த உலகத்தை பிரபஞ்சம் பார்க்கிறது , எமது காதுகளினூடாக இந்த உலகின் இனிய நாதத்தை அது கேட்கிறது, எமது மனதின் ஊடாக அதுவும் தனது உணர்வுகளை சிந்தனைகளை அனுபவிக்கிறது.
கோடானு கோடி உயிரனங்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கங்களாகும் .
எமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவு அதி அற்புதமானது .அதை புரிந்துகொண்டவர்கள் அதிஷ்டசாலிகள்.
எமது ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் நோக்கத்திற்கும் எமது நோக்கத்திற்கும் இசைவாக இருக்கும் பொழுது நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது,
எமது வெற்றி தோல்வி எல்லாம் எம்மீது தான் தங்கி இருக்கின்றது.
ஆனால் எமக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உணர்வும் எம்மோடு கலந்து தான் இருக்கிறது,  அதை புரிந்து கொள்ளாவிடில். எமது விருப்பங்களும் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும்.
நாம் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமானது எமக்கு பலவழிகளிலும் நல்ல வழியை காட்ட முயற்சிக்கும் . அதையும் மீறி நாம் தவறான பாதையில் சென்றாலும் எம்மை காப்பாற்ற அது சதா சரியான வழியை காட்டவே முயற்சிக்கும்,  ஏனெனில் அது வேறு நாம் வேறல்ல . ஆனால் தவறையே ரசிக்க நாம் முடிவு செய்துவிட்டால் அதற்கும் அது உதவி செய்யும்,  அந்த தவறில் இருந்து நாம் ஒரு அற்புதமான பாடத்தை படிக்கலாம் அல்லவா ? அதுவும் கூட ஒரு நன்மைதானே ?

உலகத்தையே உன் தலையில் சுமப்பதாக எண்ணாதே, உண்மையில் உலகம்தான் உன்னை சுமக்கிறது

எதிலும் மிகவும் சீரியஸாக இருப்பது என்பது ஒருவரின் நேர்மை , உண்மை , விசுவாசம் பணிவு தன்னம்பிக்கை போன்ற மிக உத்தமமான குணங்களின் அடையாளம் என்று நாம் பொதுவாக எண்ணுகிறோம். சீரியஸாக இருபதற்கு பெரும்பாலோர்  கவனமாக இருத்தல் என்ற பொருளை  கொண்டுள்ளனர் .
எந்த விடயத்திலும்  தேவை படும் அளவில் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு எதிலும் மகா சீரியஸாக இருப்பதைதான் நான் இங்கு குறிப்பிட வருகிறேன், 

 அதிலும் குறிப்பாக நான் சார்ந்த மக்களின் ஜனத்தொகையில் கணிசமானோர் பெரும்பாலும்   பொல்லாத சீரியஸ் பிராணிகள்தான் .

படிப்பதிலே கவனம் சாமி கும்பிடுவதில் கவனம் உழைப்பதில் கவனம் பிறரோடு பழகுவதில் கவனம் சம்பாதித்த காசை சொத்துக்களை சேமித்து வைப்பதில் கவனம் என எதிலும் கவனம் கவனம் கவனம்தான் , இது நல்ல பழக்கம் தானே இதில் என்ன குறை கண்டீர் என்று நீங்கள் வினாவகூடும் , உண்மைதான் , எமது கருமத்தில் கவனமாக இருத்தல் நல்லதுதான் அது அவசியமானதும் கூட,
ஆனால் இங்கே நான் குறிப்பிடும் கவனம் என்பது அளவுக்கு அதிகமான பய உணர்வுடன் சதா  விசனத்தோடு  இருப்பதாகும். ,

பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், அன்புதான் வாழ்வை கொண்டு வரும் .


எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது
சுபாவமாகும் . தவிர்க்க முடியாத நேரங்களில்  மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும்.
மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும் .
நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம் . அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது.
அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது பயத்தை  வெளியே காட்டி கொள்ளாமல் நடிப்பதில் மிக பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டோம்.
எமது மனதில் சதா தோன்றும் சிறு சிறு சலனங்களும் கூட பயத்துடன் கலந்தே வருகிறது.
நாம் என்னதான் அறிவு பண்பு  என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும். நாம் என்னவோ எல்லாவற்றிகும் பயபடுகிறோம்.
இந்த FEAR FACTOR எம்மை சரியான பாதையில் பயணிக்க விடாது,
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல.
இது ஒரு முக்கியமான காந்தம் போன்ற உணர்வு.  அடுத்த முக்கியமான உணர்வு அன்பு ஆகும் .
நமது சகல எண்ணங்களும் கருமங்களும் பேச்சுக்களும் ஒன்றில் அன்பின் அடிப்படையானதாக இருக்கும் , அல்லது பயத்தின் பால் பட்டதாக இருக்கும்.
இவை இரண்டில் ஏதாவது ஒரு உணர்வின் அடிப்படையிலே நமது சகல காரியங்களும் எண்ணங்களும் உருவாகுகின்றன.
அன்புக்கும் பயத்திற்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தம் எமது ஒவ்வொரு உணர்ச்சியிலும் நடை பெறுகிறது.
எப்பொழுதெல்லாம் அன்பு  வெல்கிறதோ அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக வெற்றிகரமாக வாழ்கிறோம்.
 ஆனால் துரதிஷ்ட வசமாக அன்பு அதிகம் வெல்வதில்லை .
பெருவாரியான தருணங்களில் எமது பயம் தான் வெல்கிறது. ஏனெனில் நாம் வாழும் இன்றைய உலகம் பெரும்பாலும் பயத்தின் அடிப்படையிலேயே கட்டி எழுப்பட்டிருக்கிறது.
நாம் அன்பு  காதல்  பாசம்  நேசம்  என்றெல்லாம்  வெளிப்படுத்திகொள்ளும் பலதருணங்களில்  உண்மையில்  அந்த அன்பின் முகமூடியை அணிந்து கொண்டு எமது பயத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறோம்.

நமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism


A superorganism is an organism consisting of many organisms. The term was originally coined by
James Hutton (1726-1797), the "Father of Geology" in 1789. See the discussion of Geophysiology for more on the use of this term in geological and ecological contexts.
எங்கள் உடம்பில் எவ்வளவு ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன தெரியுமா ?  நமது உடலில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ விதமான உயிரனங்கள் வாழ்கின்றன . அவற்றிக்கு எமது உடலே உலகம் அல்லது முழு பிரபஞ்சம் .
தாம் வாழும் உலகம் உண்மையில் ஒரு மனிதனின் உடல்  என்பதை அவைகளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது,
அப்படி தப்பி தவறி எதோ ஒரு உயிரினம் அறிவாளியாக அல்லது ஞானியாக உருவாகி இது போன்ற கேள்விகளை தனக்கு தானே அல்லது தானே நம்பும் அதன் உலகத்தை அதாவது நமது உடலை கேட்டால் பதில் கிடைக்குமா ?
அந்த உயரினங்கள் கேள்விகள் கேட்டு அவற்றிக்கு பதிலும் கிடைத்தால் கூட அவற்றை அந்த நுண்ணிய உயிர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
ஏனெனில் அவை ஒரு போதும் அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ள மனிதனின் உடலை அதாவது அவற்றின் பிரபஞ்சத்தை / கடவுளை அவை ஒரு போதும் நேரில் காணவில்லை கேட்கவும் இல்லை.
அதீதமான கற்பனை அல்லது அறிவு போன்ற ஏதாவது ஒன்று அளவுக்கு அதிகமாக உள்ள ஜீவன்களால் சிலவேளை  புரிந்து புரியாமலும்  ஏதோ ஒரு விடயம் தங்களை சுற்றி ஒரு மர்மமாக இருப்பதை வியப்போடு நோக்கவும் கூட்டும்.
 உண்மையில் மனிதரின் உடலில் வாழும் அந்த ஜீவராசிகளின் நிலையில்தான் நாம் உள்ளோம் ,
எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தை அல்லது முழு பிரபஞ்சத்தை பற்றி எமக்கு என்ன தெரியும் .?
ஏதோ கொஞ்சம் தெரியும்,
நிச்சயமாக தெரிய வேண்டிய விடயங்கள் மிக மிக அதிகமாக இருக்கிறது,
எமது கற்பனைக்கு எட்டாத அளவு  விரிந்த பிரபஞ்சம் எனென்ன கோட்பாடுகள் அல்லது இயற்கை விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது  என்பது பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் ஆரம்ப நிலையில் உள்ளனவே ஆகும்.
நாம் எமது பிறவியின் தன்மை பற்றியோ அல்லது நாம் வாழும் இந்த உலகம் பற்றியோ அறியவேண்டியது  மிகவும் அதிகம்.